spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவராத்திரியை முன்னிட்டு களைக்கட்டும் பொம்மைகள் விற்பனை…

நவராத்திரியை முன்னிட்டு களைக்கட்டும் பொம்மைகள் விற்பனை…

-

- Advertisement -

உடுமலையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.நவராத்திரியை முன்னிட்டு களைக்கட்டும் பொம்மைகள் விற்பனை…வருகின்ற அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். முதல் மூன்று நாட்கள், துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் வெற்றியைக் குறிக்கும் நாளாக “விஜய தசமி” என்று கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் இந்த கொலு வைக்கப்படும் காலங்களில் பூஜைகள் மேற்க்கொள்ளப்படும். கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.

இந்து சமய புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள்,தேரோட்டம், கடவுள்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள்,விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன. கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். நவராத்திரி பத்து தினங்களும் மாலை வேளையில் வண்ண கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் தோத்திரப் பாடல்களை பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தினமும் மாலை வேளையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைமுறையாக உள்ளது.

we-r-hiring

பின்னர் கடவுளுக்கு படைக்கப்பட்ட இனிப்பு மற்றும் பலகார வகைகளை வீட்டிற்கு வந்தவருக்கு கொடுத்து உபசரிப்பார்கள். உடுமலையில் கடை வீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது. விதம் விதமான பொம்மைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

MUST READ