Homeசெய்திகள்தமிழ்நாடுகமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

-

- Advertisement -

நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டுஇது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமலஹாசன் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ‘ வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.

அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், ‘நாங்கள் போட்டியிட விரும்பவில்லை’ என்றும்; திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்” என்றும்; அண்ணன் கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

we-r-hiring

 

MUST READ