spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி

நெல்லையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி

-

- Advertisement -

நெல்லையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர் மகாராணி. இவர் தனது கணவர் நந்தகோபால் மற்றும் குழந்தைகள் உடன் வாழாமல் கருத்து வேறுபாட்டால் தனியாக பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் வாயு கசிந்து சிலிண்டர் வெடித்ததினால் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

we-r-hiring

Death

திசையன்விளை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து பார்க்கும் பொழுது சம்பவ இடத்திலேயே மகாராணி உடல் கருகி பலியாகி இருந்தது தெரியவந்தது. திசையன்விளை காவல்துறையினர் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சிலிண்டர் வெடிப்பதற்கான காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ