மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளிர் உரினைத் தொகை திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும், உரிமைத்தொகை வழங்குவதற்கு 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுபட்ட பல லட்சம் பெண்கள் எங்கே விண்ணப்பிப்பது என்ற கேள்விக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இணையதளத்தில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணை
