Homeசெய்திகள்தமிழ்நாடுபணியாளர்களுக்கு 'Work From Home' வழங்க தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

பணியாளர்களுக்கு ‘Work From Home’ வழங்க தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச.04) பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ‘Work From Home’ வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கனமழை எதிரொலி…..ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து…..சசிகலா!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 02.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 250 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 380 கிமீ தென் கிழக்காகவும்,நெல்லூரில் இருந்து 380 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து டிச.04- ஆம் தேதி முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும், அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (டிச ஒருநாள் பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும், தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ