காவலர் தேர்வில் பயிற்சியின்போது மயங்கிவிழுந்து இளைஞர் பலி
புதுச்சேரி காவலர் தேர்வில் வென்று பயிற்சியில் ஒடும் போது மயங்கி விழுந்ததில் விஜய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சூரமங்கலம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26) பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2022ம் ஆண்டு நடந்த புதுச்சேரி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் முதல் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி காவலர் பயிற்சி பெற்ற வந்தார். இறுதி கட்ட பயிற்சி நடந்து வந்தது. ஜூன் மாதம் பயிற்சி முடிந்து காவல் நிலைய பணிக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 29ம் தேதி காலை ரோடு வார்க் என கூறும் 10 கிலோமீட்டர் நடக்கும் பயிற்சி நடந்தது. 10 கிலோமீட்டர் முடித்து பயிற்சி பள்ளிக்கு திரும்பியபோது, போலீஸ் மைதானம் ஓயர்லஸ் அலுவலகம் அருகே என்ற இடத்தில் விஜய் சுய நினைவு இன்றி திடீரென மயங்கி விழுந்தார். அவரது நண்பர்கள் விஜயை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுயநினைவு இன்றி 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சி காவலர் இறப்பு குறித்து கோரிமேடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.