சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளி வாட்டி வந்த நிலையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.இரவு 7 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, வேலூா், திருவண்ணாமலை, நெல்லை, திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்திருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே வெளிவாட்டி வந்த நிலையில், காற்றுடன் மழை பெய்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பூவிருந்தவல்லி, குமணன்சாவடி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, தியாகராயர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
