Homeசெய்திகள்தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?

-

விரைவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்…!   அன்று புரியும்.

ஹார்டுவேர், பெயின்டர்கள் கார்பெண்டர், பெரிய ஆள் ஹெல்பர்கள்,  டெயிலர்கள், மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர், மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர். அவரிடம் பேசினோம். அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது.  மாதம் மாதம் ரூ.10000/- (பத்தாயிரம்) ஊருக்கு அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன். வந்த பின் தான் யோசித்தேன். இந்த ஒருவர் மாதம் 10000 அனுப்புகிறார். இப்படி 10 பேர் அனுப்பினால் ஒரு லட்சம். நூறு பேர் அனுப்பினால் ஒரு கோடி. ஆயிரம் பேர் அனுப்பினால் பத்து கோடி. ஒரு லட்சம் பேர் அனுப்பினால் ஆயிரம் கோடி..

மனம் அதிர்ச்சியடைந்தது. முதலில் இவர்களின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது..? என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன்… தொழில் நகரங்களான பெரும் நகரங்களில், மாவட்ட அளவில், உதாரணத்திற்கு திருப்பூரில் மூன்று லட்சம் பேரும், கோவையில் ஏழு லட்சம் பேரும், சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள்.

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

அப்போ சேலம், ஈரோடு போன்ற இன்ன பிற மாவட்டங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்து போன நான்..

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

சென்னை, கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து, கணக்கு பார்த்தேன். மொத்தம் முப்பது லட்சம் பேர். ஒருவர் மாதா மாதம் பத்தாயிரம் என்றால் 30 லட்சம் பேருக்கு கணக்கு போட்டேன். மூணாயிரம் கோடி எனக் காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது…

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

மாதா மாதம் 3000 கோடி என்றால்.. வருடத்திற்கு 36000 கோடி… இது அனைத்தும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு, தமிழக மக்களையும், சிறு, குறு, பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம், வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டுருக்கிறது. அங்கே இருக்கும் மக்களையும் சிறு, குறு, பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது….

இது வெறும் தமிழகத்தின் மூன்று.. மாவட்டக் கணக்கு….. மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும், வட மாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி, மயக்கம் வந்து, மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்…!!!

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு… இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து, அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை..

இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம்….. கைத்தொழில்…. எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது…. அதனால் லட்சக்கணக்கான பொருட்கள், அதாவது உளி, சுத்தியல் ஆரம்பித்து  மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.

சத்தமின்றி, யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும், உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது.  இதை தமிழன் எப்போது உணர்வது..?

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா...?

மிகவும் கொடுமையானது….. ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர் கைகளில் சென்று கொண்டுள்ளது,  களை எடுத்தல், அறுப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள். இனி என்னாகும்…? யோசியுங்கள்.

பட்டாலும், கெட்டாலும் வருந்தாத, திருந்தாத முட்டாள்கள் இருக்கும் வரை இந்த அவல  நிலை தொடரும்….!!

தமிழா…!? இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்…? இதில் சில பிழைகள் இருக்கலாம்…  ஆனால், இக்கருத்தில் பெரும் உண்மை உள்ளது…

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?

சினிமா, அரசியல், ஜாதி, மொழி, இனம், மறந்து முன்னேற்றம் ஒன்றே லட்சியமாக கொண்டு உழைத்தால் உயர வாய்ப்பு இன்னும் உள்ளது. விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வாய் இல்லையென்றால் அழிவை நோக்கி நிச்சயம் தமிழகம் நாளைய தமிழகத்தை எண்ணி என்ற ஒரு சிறிய பதிவு உண்மையென்றால் அனைவரும் சிந்தியுங்கள் நன்றி

 தேர்தல் அன்று ஓட்டுக்காக கிடைக்கும்  பணமும் பிரியாணியுமே தமிழனை இந்த நிலைக்கு  கொண்டுவந்துள்ளது என உணரவேண்டும்

MUST READ