ஆண்களை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கபடுவது பெண்களே: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் பாதிக்கப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா,பிரேசில் ,சீன, எகிப்து ,அரேபிய வளைகுடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் பாதிக்க படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் லொவெல் பல்கலை கழகத்தின் இணை பேராசிரியர் மெஹ்தி ஓ. கரேல் நபி கூறுகையில்,” இதய நோய் அறிகுறிகளை கண்டறிதல் சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது .அறிகுறிகள் தோன்றிய பிறகு பெண்கள் தாமதமாகவே மருத்துவரை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான வகையில் பெண்கள் அதிக அளவு மருத்துவமனையில் அனுமதிக்க படுவதில்லை”, என்றார்.

இதுமட்டுமின்றி இளம் வயது பெண்கள் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டி காட்டி உள்ளது. 31முதல்54 வயதுடைய பெண்களுக்கு மாரடைப்பு விகிதம் 21விகிதத்தில் இருந்து 31சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.