spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…

வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…

-

- Advertisement -

இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…சர்வதேச நாணய நிதியம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச பொருளாதாரத்தை மதிப்பிட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இது ஜப்பானின் 4.186 டிரில்லியன் டாலர்களை விட சற்று அதிகமாகும்.

மேலும், 2028ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்தியாவின் ஜிடிபி 5.58 டிரில்லியன் டாலர்களாகவும், ஜெர்மனியின் ஜிடிபி 5.25 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 6.5% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டும், அடுத்தாண்டும் 6.2% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்தாண்டு இந்தியாவின் ஜிடிபி 4.187 டிரில்லியன் டாலர்களாகவும், ஜப்பானின் ஜிடிபி 4.186 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும். அதே 2027ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வரும் நிலையில், கடந்த பத்தாண்டுகளில் 105% வளர்ச்சியுடன், இங்கிலாந்து மற்றும் பிரான்சை முந்தித் சென்றது. இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் தயாரிக்கும் பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன – ஆப்பிள் நிறுவனம் முடிவு

MUST READ