உலக அளவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை வைத்து இந்தியாவில் மேலும் புதிய நான்கு ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டம் உள்ளதாக ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவன நேரடி விற்பனைமையகமாக பிகேசி மும்பை மற்றும் டெல்லியில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன.
ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை உலக அளவில் அதிகரித்துள்ளது. அதே போல இந்தியாவிலும் விற்பனை மற்றும் வருவாய் நடப்பு காலாண்டில் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பு மற்றும் விற்பனையை விரிவு படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் கூறியதாவது, “அனைத்து பகுதியிலும் ஐபோன் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. இது நமது செப்டம்பர் காலாண்டுக்கான வருவாயில் சாதனையாக அமைந்துள்ளது. அமேரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து பகுதியிலும் இந்த நிலை நிலவுகிறது. இந்தியாவில் கிடைத்துள்ள வரவேற்பு நமக்கு உற்சாகம் தருகிறது” என டிம் குக் தெரிவித்துள்ளார்.
சமீபமாக இந்தியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோர் அமைப்பது குறித்த தகவல் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை டிம் குக் உறுதி செய்துள்ளார். ஆனால் எங்கு அமைவிருக்கிறது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் பெங்களூரு, புனே, டெல்லி – என்சிஆர் மற்றும் மும்பையில் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது