தைவான் நாட்டில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டடங்கள் விழுந்தன.
தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று (ஏப்ரல் 03) அதிகாலை 05.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹூவாலியன் நகரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தைவான் நாட்டில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுக்கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜப்பானில் இரண்டு தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளில் எரிமலைகள் அதிகம் இருப்பதாலும், நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதும், 3 அடி அளவிற்கு சுனாமி அலைகள் உருவாவதும் அந்த நாடுகளின் மக்கள் இயல்பாக பார்க்கின்றனர்.