- Advertisement -
அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்கள் பயன்படுத்த பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இதனை தொடர்ந்து, அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டில் 15 உட்பட்டவரகள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான மசோத அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரான்ஸ் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


