கோடிக்கணக்கான சொத்துகளை செல்லப் பிராணிகளுக்கு கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான்’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?
பூனை மற்றும் நாய்களை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மக்களும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகளைக் குளிப்பாட்டி, அலங்கார உடைகளை அணிவித்து மகிழும் பலர், தாங்கள் பயணம் செய்யும் இடங்களுக்கும் அழைத்துச் சென்று, தங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கின்றனர்.
அந்த வகையில், சீனா நாட்டின் ஷாங்காய் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி லியூ. தனது சொத்துகளை மகன், மகள்கள் ஆகியோருக்கு உயில் எழுதி இருந்த நிலையில், தான் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தி அடைந்துள்ளார் மூதாட்டி.
மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!
இந்த நிலையில், தன்னுடன் எப்போதும் உடன் இருக்கும் பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு ரூபாய் 23 கோடி மதிப்பிலான சொத்துகளை எழுதி வைத்து, உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பியுள்ளார்.