Homeசெய்திகள்உலகம்ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

-

- Advertisement -

 

ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

பெலாரஸ் அரசு மூலம் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறுவதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ரஷ்யாவில் நீடித்து வந்த உள்நாட்டு குழப்பம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவ அமைப்பான வாக்னர், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யப் படையுடன் இணைந்து போரிட்டு வந்தது. வாக்னர் ஆயுதப்படையின் உரிமையாளர், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகத் திரும்பினார். உக்ரைன் எல்லையோரத்தில் உள்ள ரஷ்ய நகரை தனது படைகள் கைப்பற்றிவிட்டதாக அவர் அறிவித்தார்.

இது ரஷ்ய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின், ரஷ்யாவைக் காப்பதற்காக ஆயுதக் கிளர்ச்சி அடியோடு அழித்து ஒழிக்கப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே, பல ராணுவ முகாம்களை வாக்னர் படைகள் கைப்பற்றிவிட்டதாகவும், மாஸ்கோவைக் குறி வைத்து, வாக்னர் படைகள் முன்னேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, மாஸ்கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மறுபுறம் ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ், வாக்னர் படையின் உரிமையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

அந்த அமைப்பின் மீதும், வாக்னர் படையின் உரிமையாளர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்தது. இதன் காரணமாக, உயிரிழப்புகளைத் தவிப்பதற்காக, வாக்னர் படைகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ