spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

-

- Advertisement -

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் காவல்துறையை சேர்ந்த 729 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்நத 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்அறிவிக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

அதன்படி மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தில் 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி வன்னிய பெருமாள், கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார் அபுநபு, எஸ்.பி-க்கள் பெரோஸ்கான் அப்துல்லா, கே.பிரபாகர், பாலாஜி சரவணன், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, , டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ