spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு - அவினாசி திட்ட

we-r-hiring

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் கனவு திட்டமான அத்திக்கடவு – அவினாசி திட்டம் ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, அந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக இன்றுஏ தொடங்கிவைத்தார்.

இத்திட்டம் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படுவதால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவம். மேலும் 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

#Resign_Stalin

இந்த நிலையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.41 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

MUST READ