பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான உரிமை என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர் தான் டில்லி பாபு. அதைத் தொடர்ந்து இவர் ஆதியின் மரகத நாணயம், அருள் நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள், விஷ்ணு விஷாலின் ராட்சசன், ஜிவி பிரகாஷின் பேச்சுலர், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே என பல முன்னணி நடிகர்களின் படங்களை தனது ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். மேலும் டில்லி பாபு, பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர். இவர் கடந்த சில நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் டில்லி பாபு (இன்று) செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை சென்னையில் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.