spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகல்வி தான் கடவுள்.... 'சார்' படத்தின் திரை விமர்சனம்!

கல்வி தான் கடவுள்…. ‘சார்’ படத்தின் திரை விமர்சனம்!

-

- Advertisement -

‘சார்’ படத்தின் திரை விமர்சனம்

விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் திரைப்படம் இன்று (அக்டோபர் 18) வெளியாகி உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்க கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.கல்வி தான் கடவுள்.... 'சார்' படத்தின் திரை விமர்சனம்!

we-r-hiring

மாங்கொல்லை எனும் ஊரில் 1960 முதல் 80 காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இந்த படம் நகர்கிறது. இதன்படி இந்த படத்தில் விமல் ஞானம் என்ற வாத்தியாராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது தாத்தா கட்டிய பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி அங்குள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார் விமல். உயர் ஜாதியை சேர்ந்த தலைவரான ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி அறிவு கிடைத்துவிட்டால் நம்மால் அவர்களை அடிமையாக்க முடியாது என்ற நோக்கத்தில் தெய்வ நம்பிக்கையை புகுத்தி அந்தப் பள்ளிக்கூடத்தையே இடிக்க திட்டம் போடுகிறார். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் போராடுகிறார் விமல். அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்க விடாமல் தடுத்தாரா? அங்குள்ள மக்களுக்கு கல்வி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.கல்வி தான் கடவுள்.... 'சார்' படத்தின் திரை விமர்சனம்!

நடிகர் விமல் வாகை சூடவா படத்திற்கு பிறகு இந்த படத்தில் வாத்தியாராக நடித்திருக்கிறார். வழக்கம்போல் தனது நடிப்பினால் படத்தை தாங்கி பிடித்துள்ளார். விமலுக்கு ஜோடியாக சாயாதேவி கண்ணன் படித்திருக்கும் நிலையில் தனக்கான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். வில்லனாக வரும் ஜெயபாலன் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். படத்தின் முதல் பாதி நகைச்சுவை, காதல் என நகர்ந்து செல்கிறது. ஒரு சில இடங்களில் தேவையில்லாத காட்சிகள் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சூடுபிடிக்க தொடங்கிய இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கல்வி தான் கடவுள்.... 'சார்' படத்தின் திரை விமர்சனம்!அதாவது கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை கூறியுள்ளனர். கல்வியை பொறுத்தவரையில் மூடநம்பிக்கையை யார் திணித்தாலும் அவர்கள் சாமி இல்லை ஆசாமி தான் என்றும் கல்விதான் கடவுள் என்பதையும் அழகான திரைக்கதையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர். சித்துக்குமாரின் இசை யும் இனியன் ஜெ ஹரிஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. முதல் பாதையில் சில தொய்வுகளை சரி செய்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் திரைப்படம் தான் சார்.

MUST READ