நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் ரிலீஸுக்கு பிறகு SK 23 படத்தில் இணை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி தற்காலிகமாக SK 23 படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ், சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தை இயக்குவதற்கு சென்று விட்டார். சிவகார்த்திகேயனும் அமரன் பட ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது அமரன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. எனவே வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி மீண்டும் SK 23 படப்பிடிப்பில் இணைய உள்ளாராம் சிவகார்த்திகேயன். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தவிர ருக்மினி வசந்த், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.