spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு - நடிகை கஸ்தூரி கைது

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு – நடிகை கஸ்தூரி கைது

-

- Advertisement -

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேச்சு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நடிகை கஸ்தூரி

we-r-hiring

சென்னை எழும்பூரில் அண்மையில் நடைபெற்ற பிராமணர் சங்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்த நிலையில், கஸ்தூரி மீது, எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நடிகை கஸ்தூரி

இந்த நிலையில், அவதூறு பேச்சு விவகாரத்தில் முன்ஜாமின் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து, தலைமறைவாக உள்ள கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைத்து போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில்,  ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலிசார் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ