spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலவச வேட்டி, சேலைகளை ஜன. 10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவு

இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவு

-

- Advertisement -

பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.

we-r-hiring

இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது. இலவச வேட்டி, சேலை திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது

MUST READ