Homeசெய்திகள்தமிழ்நாடுகல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்கள் பணியாற்ற சென்றாலும், சமத்துவம் – சமூகநீதி – வாய்மை – நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடவேண்டும் என்று யுபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!சென்னை, பி.எஸ். குமாரசாமி இராஜா சாலை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, அண்ணா அரங்கில் மனித வள மேலாண்மைத் துறை சார்பில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு 18 பெண்கள் உட்பட 57 வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவது, மாணவர்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என  நினைத்தேன். பள்ளிக்கல்வி – கல்லூரிக் கல்வியைக் கடந்து, மாணவர்களின் திறனை மேம்படுத்த ஒரு திட்டத்தை கொண்டு வரவேண்டுமென்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் – மாறி வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றார் போல், நம்ம மாணவர்களின் ‘ஸ்கில்ஸ்’ வளர வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும் – இளைஞர்களும் நிச்சயம் தங்களுடைய லட்சியங்களை அடையவேண்டும், வாழ்க்கையில் உயர்ந்து, ‘நான் முதல்வன்’ என்று பெருமைப்படவேண்டும் என்கிற எண்ணத்தில் தான், இந்த திட்டத்திற்கு  ‘நான் முதல்வன்’-என  தன்னம்பிக்கை ஊட்டுகிற பெயர் வைத்து, 2022-ல் என்னுடைய பிறந்தநாள் அன்று தொடங்கி வைத்தேன். உங்களிடமும் – இந்த திட்டத்தின் மீதும் நாங்கள் வைத்த நம்பிக்கை பலன் அளித்து உள்ளது என்ற மகிழ்ச்சியோடு, பெருமையோடு இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டுள்ளேன்.

எதிர்கால இந்தியாவே தமிழ்நாடுதான் வழி நடத்தப்போகிறது என்ற நம்பிக்கையை விதைத்து வரும் ‘நான் முதல்வன்’ வெற்றியாளராகிய உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றி” என்ற பாரதியின் வரிகளை உங்கள் வெற்றியோடு பொருத்திப் பார்க்கிறேன். என் உள்ளம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது.

இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்க பணியாற்ற சென்றாலும், சமத்துவம் – சமூகநீதி – வாய்மை – நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடவேண்டும் என்று யுபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

”உன்னால் முடியும்” என்று உங்களை ஊக்கப்படுத்திட உங்கள் உழைப்பை சரியான பாதையில் வழிநடத்திட தொடங்கப்பட்டது தான் திராவிட மாடல் ஆட்சியின் தூண் போன்ற உறுதிமிக்க ‘நான் முதல்வன்’ திட்டம். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவர்களில் 51 வெற்றியாளர்கள் “நான் முதல்வன்” திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

சாமானிய வீடுகளில் பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுதப் போகிறவர்களாக வளர்ந்திருக்கும் உங்களை பாராட்டுவதுதான், திராவிட இயக்கத்தின் வழிவந்த எனக்கு மகிழ்ச்சி. கல்விதான் நமக்கான ஆயுதம்! எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விட கூடாது! அதனால் தான், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” தொடங்கி, “புதுமைப்பெண்”, “தமிழ்ப்புதல்வன்”, “கல்லூரிக் கனவு”, “சிகரம் தொடு”, “உயர்வுக்குப் படி” என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, “நான் முதல்வன்” போன்ற திட்டங்களால் “அப்ஸ்கில்” செய்து, பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டு பசங்க “பிளேஸ்மெண்ட்” ஆகிறதை பார்த்து பூரிப்பு அடைகின்றோம்.

தமிழ்நாட்டுக்கென்று  ஒரு ‘அறிவுமுகம்’ இருக்கு! ஒரு ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆஃபிசர் தமிழ்நாட்டு காரராக  இருந்தால், அவங்களுக்கான மதிப்பே தனி! அதுவும் அவர்கள் தமிழர்களாக  இருந்தால், இன்னும் மதிப்பு கூடும்! ஆனால், கடந்த சில ஆண்டுகளாக UPSC தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாவது குறைந்து விட்டதாக கூறினாலும், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் போக்கி வீட்டீர்கள்.

குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாரான உங்களுக்கு, நம்முடைய அரசு எப்படியெல்லாம் பயிற்சி கொடுதார்கள் – ஊக்கம் கொடுத்தார்கள் – உங்களோட சுமைகளை குறைக்க ஊக்கத்தொகை கொடுத்தார்கள் என்று , உங்களில் பலரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் சொன்னீர்கள். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ் ஆக ஊக்கப்படுத்தும். மற்றவர்களுக்கு உதவுகின்ற உங்களது பணியை, நீங்க தேர்வான அன்றைக்கே தொடங்கிவிட்டீர்கள். அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும் – சக மனிதர்களுக்கும் – எளியோர்களுக்கும் உதவுறதா – அவங்களோட வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுறதா அமையணும். இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். நீங்க “ரோல்மாடல்”-னு சொன்ன பல ஆஃபிசர்ஸ், அவங்களோட “சர்வீஸ்”-ல செஞ்ச மாற்றங்களை நீங்க சொல்லி பெருமைபடுகிறது மாதிரி, நாளைக்கு உங்க பேரையும் “ரோல்மாடலா” சொல்லணும்.  உங்களின் பணிக்காலம் அப்படிபட்டதாக அமைய வேண்டும்.

என்னுடைய பொதுவாழ்க்கை அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இந்தியாவோட எந்த மூலைக்கு நீங்க பணியாற்ற  சென்றாலும், சமத்துவம் – சமூகநீதி – வாய்மை – நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுங்கள். உங்களுடைய சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால் மக்களோட மனதில் உங்களுக்கு என்று ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்றார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்”-னு வள்ளுவர் சொன்ன மகிழ்ச்சியை, நீங்க பிறந்தப்போ, உங்க பெற்றோருக்குக் கொடுத்தீங்க… இன்றைகு புறநானூறில் சொல்வது போல் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்ற கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்துள்ளீர்கள்.  ஆனாலும், இந்த மகிழ்ச்சி எனக்குப் போதாது; உங்க பணிக்காலத்தில் நீங்கள் எளியோருக்கு உதவி மற்றும் அவர்கள் வாழ்வில்  மாற்றங்களை ஏற்படுத்தும் செய்தி எனக்கு எட்டிட வேண்டும் – என் மகிழ்ச்சியை நீங்கள் பன்மடங்காக்கிட வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன் என்று உரையாற்றியுள்ளாா்.

அப்போது வரவேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும் பொழுது நிறைய தமிழ்நாட்டில் இளைஞர்கள் அங்கு இருப்பார்கள் என்று கூறிய அவர் 2020 – 2021ஆண்டு 20-க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் 50 முதல்வரை உருவாக்கி இருக்கிறார் என்று யுபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினார்.

ஒன்றிய குடிமைப் பணிகள் தேர்வு என்றாலும் அதிலும் தமிழ்நாடு நம்பர் ஒன்றில் இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு நம்முடைய முதலமைச்சர் நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவினைத் தொடங்க உத்தரவிட்டார். நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவின் கீழ் வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகை வெறும் நிதி உதவி கிடையாது, ஒன்றிய அரசின் குடிமைப்பணி என்கிற உங்களுடைய கனவின் மீது வைத்திருக்கக் கூடிய முதலீடு. இன்று சிவசந்திரன், மோனிகா போன்றவர்கள் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளனர்..

இன்று 50 பேர் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்றால் நாளை உங்களை பார்த்து இன்னும் 100 பேர் 200 பேர் உற்சாகத்துடன் யுபிஎஸ்சி தேர்வை நோக்கி முன் வருவார்கள். உங்களுடைய ஒவ்வொருவரின் பணியும் சிறக்க வேண்டும், நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்காக பணிபுரிய வேண்டும் என்பது எங்களுடைய ஆசை நீங்கள் வெளிமாநிலங்களுக்கு பணியாற்ற சென்றாலும் நீங்கள் பணி செய்கின்ற விதம் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறீர்கள் என்று சொல்லும் அளவிற்கு உங்கள் பணியை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறை நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் கீழ் பயனடைந்த மாணவர்கள் 50 பேர் வெற்றி பெற்றுள்ளீர்கள், தற்பொழுதுதான் ஆப் செஞ்சுரி அடித்து உள்ளீர்கள், நம்முடைய அரசின் ஆசை மாணவர்கள் செஞ்சூரி அடிக்க வேண்டும் என்பது தான். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் 50 முதல்வரை உருவாக்கி இருக்கிறார்கள். குறைந்தது 100 பேராவது வெற்றி பெற வேண்டும். இளைஞர்களுக்கு துணை நிற்க நம்முடைய அரசு தயாராக உள்ளது என்றார்.

மேலும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தால் எளிய கிராமப்புற பின்னணியில் வந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என வெற்றி பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் அறிவுரைப்படி எளிய மக்களின் பின்னால் இருப்போம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MUST READ