சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படமானது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களைப் போல் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதனைப் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் மேனன், கீதிகா, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எனவே வருகின்ற மே 16ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலரில் கௌதம் மேனன், யாஷிகா ஆகிய இருவரும் சூர்யா – ஜோதிகாவின் ‘உயிரின் உயிரே’ பாடலுக்கு நடனம் ஆடுவது போன்று காட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த பலரும் கௌதம் மேனனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?.. அவருக்கு எவ்வளவு தாண்டா கடன் பிரச்சனை இருக்கு? .. என்றெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து பேசிய கௌதம் மேனன், “டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் என்னுடைய படங்களின் SPOOF இருக்கும். அதில் நானே நடித்திருக்கிறேன்.
மூன்று நாள் வேலை தான் ஆனால் உங்க படங்கள் மாதிரியே பண்ணனும் என்று சந்தானமும், பிரேமும் கேட்டார்கள். சந்தானம் என்னிடம், ‘சார் நீங்க கேட்டப்ப எனக்கு டேட்டே இல்லனாலும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தேன். நீங்க எனக்காக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிக்கணும்’ என்று சொன்னார். அப்போது நான் உங்களுக்காக மட்டும் நடிக்கிறேன் என்று நடித்துக் கொடுத்தேன். ஆனால் நான் என்ஜாய் பண்ணி நடித்தேன். அந்த காட்சிகளை எல்லாம் தியேட்டரில் பார்க்கும்போது பயங்கரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -