பொதுவாக நார்ச்சத்து என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று. ஏனென்றால் நார்ச்சத்தை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இருப்பினும் எந்த ஒரு பொருளும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பதைப் போல் நார்ச்சத்து வகைகளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அது ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
நார்ச்சத்தினால் கிடைக்கும் நன்மைகள்

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு சத்து ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நார்ச்சத்தானது குடலுக்குள் நல்ல பாக்டீரியா வளர உதவி புரிகிறது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வை கொடுத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
அளவுக்கு மீறினால் ஏற்படும் விளைவுகள்
நார்ச்சத்து அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, அதிக வாயுக்களால் உண்டாகும் வயிற்று வலி, நீர்மம் குறைந்தால் ஏற்படும் மலச்சிக்கல், குடல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே ஏற்கனவே நார்ச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்சத்தை மெது மெதுவாக அதிகரிக்க வேண்டும். அதன்படி பெண்கள் நாள் ஒன்றுக்கு 21 முதல் 25 கிராம் அளவு நார்சத்து எடுத்துக் கொள்ளலாம். ஆண்கள் 30 முதல் 38 கிராம் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. மேலும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வதும் நல்லது.