சென்னையில் வாடகை வீட்டில் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நித்யா கொலை வழக்கில் திடீா் திருப்பம்!லிவிங் டு கெதா்
சென்னையில் வாடகை வீட்டில் நித்யா என்ற 26 வயதுடைய இளம்பெண் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார். இவா் அம்பத்தூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவா். இந்நிலையில் நித்யாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டும் சண்டை போட்டுள்ளனா்.
பின்னா் பாலமுருகன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் நித்யா கதவை திறக்கவில்லை. உடனே பாலமுருகன் கீழ் வீட்டில் சாவி வாங்கி வந்து பாா்த்த போது நித்யா இறந்து கிடந்துள்ளாா். காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 25 சவரன் நகைகள் காணவில்லை எனவும் பாலமுருகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் நித்யாவின் தாய் புகாா் அளித்துள்ளாா்.திடீா் திருப்பம்
இந்நிலையில் இவ்வழக்கில் திடீா் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நித்யாவின் செல்போனை வைத்து கடைசியாக அவர் யாரிடம் பேசியிருந்தார் என்றும், அந்தப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் நித்யாவுக்கும் டாக்டர் சந்தோஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரிய வந்தது. நித்யா பல முறை சந்தோஷிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை கேட்டு பெற்றுள்ளார்.
நித்யா தொடர்ந்து மருத்துவா் சந்தோஷிடம் பணம் கேட்டு தன்னை தொந்தரவு செய்து வருவதால், நித்யாவை கொல்ல முடிவு செய்து கொடுங்கையூரில் உள்ள நித்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளாா். அங்கு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அந்த மதுவில் 5 துக்க மாத்திரை கலந்து மருத்துவா் கொன்றது அம்பலமாகியுள்ளது. மேலும் தன்னிடம் ரூ.8 இலட்சம் பெற்று ஏமாற்றியதால் நித்யாவை கொன்றதாக மருத்துவா் வாக்குமூலம் அளித்துள்ளாா். கைது செய்யப்பட்ட மருத்துவா் சந்தோஷ் குமாரிடமிருந்து 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்ய்பபட்டன. மேலும் மருத்துவரிடமிருந்து நகைகளை வாங்கி வைத்திருந்த முஜிபூா் ரகுமான் என்பவரிடம் காவல் துறையினா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!