Homeசெய்திகள்அரசியல்பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

-

- Advertisement -

பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்டுள்ள கமல்ஹாசனை, ம.நீ.ம நிர்வாகிகள் சந்தித்து (இனிப்பு, புத்தகங்களை) வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

மேலும், ஜூலை 25 ஆம் தேதி கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். அதற்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு, சுற்றுப்பயணம் என 2026 சட்டமன்ற தேர்தல் பணியில் அதிக கவனம் செலுத்தி தீவிர அரசியலில் கமல்ஹாசன் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நிர்வாகிகளிடம் பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

வாழ்த்து தெரிவிக்க வரக்கூடியவர்கள் புத்தக மட்டுமே வழங்கப்பட வேண்டும். பூச்சண்டு,சால்வை போன்றவை கொண்டுவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், தொண்டர்களும் நிர்வாகிகளும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த போது நிர்வாகி ஒருவர் வாளை பரிசாக வழங்க முயன்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், வாளை வாங்க மறுத்த கமல்ஹாசன் ஆயுதம் கையில் இருக்கக் கூடாது கீழே தான் இருக்க வேண்டும் என நிர்வாகியை கண்டித்ததார்.

ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு

MUST READ