ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.மும்பை நவா ஷேவா பகுதியில் செயல்படும் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் (JNPA) ரூ.800 கோடிக்கு மேற்பட்ட இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக, முன்னாள் தலைமை மேலாளர் (PP WD) மற்றும் பல தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களின் மீது சி பி ஐ (CBI) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜேஎன்பிஏ அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்து, துறைமுக ஆழப்படுத்தும் திட்டத்தில் பணி ஒப்பந்தங்களை திசைதிருப்பி, அரசுக்கு ரூ.800 கோடிக்கு மேற்பட்ட இழப்பை ஏற்படுத்தியதாக சி பி ஐ குற்றச்சாட்டியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மும்பை மற்றும் சென்னை சார்ந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கூட்டு ஒப்பந்ததாரர்களாக இருந்தனர். திட்ட மேலாண்மை ஆலோசகர் என ஒரு தனியார் ஆலோசனை நிறுவனம் செயல்பட்டது. முதலாம் கட்டத்தில் (Phase-I) துறைமுகம் பராமரிக்கப்பட்ட போது, மிகை ஆழப்படுத்தல் (Over-dredging) என கூறி 365.90 கோடி கூடுதலாக கட்டணம் செலுத்தப்பட்டது.இரண்டாம் கட்டத்தில் (Phase-II), அது முதல் கட்ட பராமரிப்பு காலத்துடன் ஓவர்லாப் ஆனது. ஆனால் எந்த மிகை ஆழப்படுத்தலும் செய்யப்படவில்லை என்று காட்டப்பட்டும்.

மேலும் 438 கோடி ரூபாய் முறைகேடாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த 800 கோடி ரூபாய் மோசடியில் ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆணையத்தின் தலைமை மேலாளர் சுனில் குமார், டி சி இ எனப்படும் தனியார் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தேவ தத் போஸ், மேலும் டாட்டா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம்,மும்பை போஸ்கலிஸ் ஸ்மித் இந்தியா,சென்னை சேர்ந்த ஜன் டி நல் ட்ரட்ஜிங்க் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள 5 இடங்களில் சி பி ஐ சோதனை நடைபெற்றது. JNPA அதிகாரிகள் மற்றும் ஆலோசனை நிறுவன அதிகாரிகளின் வீடுகள் குற்றச்சாட்டுக்கு உள்ள தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 11 அடுக்கு கொண்ட கேப்பிட்டல் டவர் என்கிற பில்டிங்கில் பத்தாவது மாடியில் Jan de nul என்கிற கடல் சார்ந்த கட்டுமான மற்றும் கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் தேனாம்பேட்டையில் கிளை அலுவலகம் உள்ளது. இது ஒரு பெல்ஜியம் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் கடல் சார் ஆராய்ச்சி மற்றும் கடல் சார்ந்த கட்டுமான பணிகள், துறைமுக மேம்பாடு, காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான கட்டுமான பொருட்களை தயாரிப்பது ஆகியவற்றை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனைகளில் திட்டம் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள்,அரசு ஊழியர்களின் முதலீட்டு விவரங்கள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து சிபிஐ நடத்தி வருகிறது.