போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்திடமிருந்து ஒரு கிராம் கொக்கைனை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். ஸ்ரீகாந்திக் தரப்பு வழக்கறிஞா் முதல் வகுப்பு சிறையில் அவரை வைக்க கோாிக்கை விடுத்தாா். அதன் அடிப்படையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா். போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் காந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. FIR-ல் முதல் எதிரியாக பிரதீப் குமாரும், இரண்டாவது எதிாியாக ஜான் என்பவரும் சோ்க்கப்பட்டுள்ளனா். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தொடா்ந்து பயன்படுத்திய குற்றத்திற்காகவும், அதனை வைத்திருந்த குற்றத்திற்காகவும் நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளாா். வணிக ரீதியான அளவுக்கு உட்பட்டு, போதைப் பொருள் கையில் வைத்திருப்பது தொடா்பான பிரிவிலும், குற்றச் செயலில் பங்கு பெறுபவா் என்ற போதைப் பொருள் தடுப்புச் சட்டப் பிாிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருள் வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீசாா் தீவிரமாக தேடி வருகின்றனா். போதைப் பொருள் வழக்கில் தொடா்புடைய அனைவரும் ஆதாரத்துடன் சிக்கினால், கடுமையாக தண்டிக்கப்படுவாா்கள் என்று காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.