விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் ஆதாரமாக உள்ள 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் டன் கணக்கான ஏரியில் மிதக்கின்றன. பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் இருப்பதாக குடிநீர் வாரியம் அளித்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலா்களும், பொதுமக்களும் கோாிக்கை வைத்துள்ளனா்.திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், பாணவேடு தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது பல ஆண்டுகளாக இந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்து வந்தனா். அதுமட்டுமல்லாமல், குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த ஏரியில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து கழிவுநீர் கலந்ததாலும் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததால் இந்த ஏரி தற்போது மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பார்ப்பதற்கு சதுப்பு நில காடுகள் போல் காட்சி அளிக்கும் இந்த ஏரி மாசடைந்ததால் இதில் வளர்ந்திருக்கும் மரங்களும் பட்டு போய் காட்சி பொருளாக காட்சி அளித்து வருகிறது. தற்போது இந்த ஏரியின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான மருத்துவக் கழிவுகள் கொட்டி வைத்திருப்பதால் இந்த ஏரி முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியைச் சமூக ஆர்வலர்கள் ஏரியை மீட்டெடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.சம்பிரதாயத்திற்கு என்று அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அகற்றாமல் அதன் மீது மண்ணைக் கொட்டி மூடிவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் இந்த ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகின்றனர். 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய ஏரியை தூர்வாரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்தால் மிகப்பெரிய நீர் தேக்கமாக இதனை மாற்றலாம் எனவும் வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு இந்த நீரை பயன்படுத்தலாம் எனவும் இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த ஏரியை சீரமைக்க வேண்டுமென்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இந்த நீரை பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளும் சான்று ஒன்று அளித்து இருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விஷயமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இயற்கையாக நீர் நிலைகளை உருவாக்கும் தமிழக அரசு பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கும் இந்த ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என சமூக ஆர்வலர் விக்னேஷ் பேட்டியளித்துள்ளாா்.
பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த டிப்பர் லாரி! கேரவன் ஓட்டுநர் பலி!