- Advertisement -
தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் பள்ளி கூடுதல் கட்டிடமான 4-வது மாடி கடந்த மாதம் இடிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம் தாரா புரம் பேருந்து நிலையம் அருகே சென்னை உயா்நீதி மன்ற வழக்கறிஞர் முருகானந்தம் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். அவரை கொலை செய்து விட்டு, தப்பிய மர்ம நபர்களை குறித்து போலீஸ்சாா் தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
