spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்- வழக்கில் திடீர் மாற்றம்

ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்- வழக்கில் திடீர் மாற்றம்

-

- Advertisement -

ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்- வழக்கில் திடீர் மாற்றம்

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நடிகர் சிம்பு நடித்த 10 தல படத்திற்கு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்க படாத விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ரோகிணி நரிக்குறவர்

இதனை எடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதி சான்றிதழை பெற்று பொன்னேரி தாசில்தார் இடம் காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

we-r-hiring

இதில் பொன்னேரி தாசில்தார் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்து கோயம்பேடு போலீசார் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அரசு வழக்கறிஞருக்கு இது தொடர்பாக கோப்புகள் அனுப்பப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள சட்டப்பிரிவான சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது

MUST READ