spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை….

குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை….

-

- Advertisement -

குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை….தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

we-r-hiring

MUST READ