
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டி, நேற்று (மே 12) இரவு 07.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தது.

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… மிரட்டலா ஒர்க் அவுட் பண்ணி அசத்திய ரோபோ ஷங்கர்!
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த சூர்யகுமார் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 103 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர், 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
உண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே… ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!
பந்து வீச்சின் போது, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் அணி வீரர் ரஷீத் கான் பேட்டிங்கிலும், 32 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். எனினும், 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.