
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!
அதன்படி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக ஆசியா மரியம் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறைக் கூடுதல் ஆணையராக வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார். பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- எங்கெங்கு எவ்வளவு மழை?
நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவைகளின் தலைவராக விஜயகுமார் இ.ஆ.ப., அடையாறு- கூவம் நதி மறுசீரமைப்புக்கு சிறப்பு அதிகாரியாக விஜயகுமார் இ.ஆ.ப., கூட்டுறவுத்துறைக் கூடுதல் பதிவாளராக விஜயா ராணி இ.ஆ.ப., சிறப்புச் செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.