spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிவிரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

-

- Advertisement -

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர் காரணமாக ஆவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்ற பெங்களூர் சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில். ஒரு மணி நேரத்திற்கு பின் புறப்பட்ட ரயிலில் ஏராமல் நடைமேடையை கடந்து சென்ற ரயிலை பிடிக்க டிக்கெட் பரிசோதகர் ஓடி சென்ற சம்பவம்.

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.. இதனால் மழை நீர் தேங்கி இருக்கும் சூழலில் ரயில் நிலைய தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை பேசின் பாலம் ரயில் நிலையம் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பெங்களூர் சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

14 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பெட்டியில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கி புறநகர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனிடையே தண்டவாளத்தில் இருந்த மழை நீர் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் ஆவடியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்து புறப்படத் தொடங்கியது.

அப்போது ரயில் புறப்படுவதை அறியாமல் நடைமேடையில் இருந்து வெளியே நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) ஓடி போய் ரயிலில் ஏற முயன்ற சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது. இதன் பின் நடைமேடையை கடந்து நின்ற ரயிலில் டிக்கெட் பரிசோதகர்தள்  ஓடி போய் ஏறியவுடன் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மார்க்கமாக கடந்து சென்றது.

ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் சதாப்தி அதிவிரைவு ரயில் ஆவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ