spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலில் திடீர் தீ- பயணிகள் அலறல்

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலில் திடீர் தீ- பயணிகள் அலறல்

-

- Advertisement -

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலில் திடீர் தீ- பயணிகள் அலறல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்ற ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு இன்று மாலை சரியாக 6:20 மணி அளவில் புறப்பட்ட லோக்மான்ய திலக் அதிவிரைவு வண்டி பேஸின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்த நிலையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பாக ரயில் புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள் விபத்திற்கு உள்ளானது. ரயில் இன்ஜின் மற்றும் இணைக்கப்பட்ட முதல் பெட்டிக்கு இடையே ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

Image

சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து ரயில் இன்ஜின் மற்றும் பெட்டி இடையே ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து இருப்புப் பாதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ரயில் பெட்டியின் இணைப்பு பகுதியில் இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள பவர் கேபிளில் மின்கசிவு ஏற்பட்டதே தீ விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

MUST READ