spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்

தோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்

-

- Advertisement -

தோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் வைத்து 27 வயதுடைய பெண்ணை, கிரண் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கில் பகுதியை சேர்ந்தவர் கிரண். இவருடைய தோழி, இன்னொரு ஆணுடன் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். இதையறிந்த கிரண், தோழியை காண உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று, உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன் என பொய் சொல்லி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து குடோன் ஒன்றுக்கு கடத்தி சென்ற கிரண், அப்பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

we-r-hiring

Image

பல மணிநேர சித்ரவதைக்கு பின்னர் நினைவு திரும்பிய அப்பெண், கிரண் சாப்பாடு வாங்க சென்றிருந்த நேரத்தில் அரைகுறை ஆடைகளுடன் குடோனில் இருந்து தப்பி சென்று அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரணை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ