
அஜித்பவார் மற்றும் அவருடன் வெளியேறிய ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், திடீரென அக்கட்சியில் இருந்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் விலகி, ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராகியுள்ளார்.
இந்த நிலையில், அஜித்பவாரையும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.
கட்சியை விட்டு விலகுவது குறித்து 10 பேரும் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இது விதிமீறல் என்றும் கூறியுள்ள ஜெயந்த் பாட்டீல், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு
இதற்கிடையே, தனக்கு 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் கூறியிருப்பதில் உண்மை இல்லை என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குறைந்தது 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, கட்சித் தாவல் சட்டம் பாய்வதில் இருந்து அஜித்பவார் தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.