spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஜூலை 02) மாலை 06.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். தி.மு.க.வின் பி டீம் ஆக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகம் பின்பற்ற வேண்டும்.

we-r-hiring

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா காலத்தின் போது, இக்கட்டான நிலையிலும் சிறப்பாக மருத்துவச் சிகிச்சையளித்தோம். தற்போது மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சைக் கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். சென்னையில் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் அரசுப் பார்த்துக் கொள்ள வேண்டும். மது விற்பனையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்; மது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ