spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

-

- Advertisement -

 

குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!
Photo: President Of India

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ளார்.

we-r-hiring

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆளுநருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடுகள் இல்லை”- தமிழக அரசு விளக்கம்!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, பின்னர் உத்தரவை நிறுத்தி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென முதலமைச்சரும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இந்த நிலையில், ஏழு நாள் பயணமாக, டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, தமிழக அரசியல் சூழல், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ