Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை திட்டம்- 1.50 கோடி பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்- 1.50 கோடி பேர் விண்ணப்பம்

-

- Advertisement -

மகளிர் உரிமைத் தொகை திட்டம்- 1.50 கோடி பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? நடைமுறைகள் முழு தகவல்கள் இதோ!

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் படி, குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இரண்டு கட்டமாக முகாம்கள் நடைபெற்றது. இதில் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Kalaignar Magalir Urimai Thogai Thittam Application Form Pdf

மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர். 2 கட்டங்களாக நடந்தமுகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்றுவருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வங்கி கணக்குகளுடன் ஆதாரர் எண்ணை இணைக்காத பயனாளிகளுக்கு தகுந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

MUST READ