- Advertisement -
மோடிக்கு தோல்வி பயம்- டிசம்பரில் தேர்தல் வரலாம்: மம்தா பானர்ஜி
தோல்வி பயத்தில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டிஎம்சி மாணவர் பிரிவு பேரணியில் உரையாற்றிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “காவி கட்சி ஏற்கனவே நமது நாட்டை சமூகங்களுக்கிடையேயான பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நம் நாட்டை வெறுப்பு தேசமாக மாற்றிவிடும். லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக ஏற்கனவே அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துள்ளது. அதனால் வேறு எந்த அரசியல் கட்சியும் அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது.

தோல்வி பயத்தில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு மாற்ற முயற்சிப்பது சந்தேகம் அளிக்கிறது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்யும்” என்றார்.