spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூபாய் 1,000 திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“ரூபாய் 1,000 திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசசு!
Photo: DMK

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ குறித்து அரசு உயரதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

we-r-hiring

டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைவர். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவர் என்பதால் கிடைக்கும் பாராட்டு ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். ரூபாய் 1,000 தொகை தகுதியானோர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வங்கிகள்- பயனாளிகள் இடையேயான தொடர்பு சீராக உள்ளதா என்பதை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூபாய் 12,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

ரூபாய் 1,000 தொகைக்கான ஏடிஎம் கார்டுகள் பயனாளிகளுக்கு படிப்படியாக வழங்கப்பட வேண்டும். மாதந்தோறும் முதல் ஒருவார காலம் இத்திட்டத்திற்காக தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ