spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

புழல் சிறை

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜா ( எ) கஜேந்திரன் (63). இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் மறைமலை நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் ஆயுள் தண்டனை பிரிவில் தண்டனையை அனுபவித்து வந்தார். கடந்த சில நாட்களாக கஜேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் இன்று அதிகாலை தண்டனை சிறையின் கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக கைதிகள் அளித்த தகவலின் பேரில் சிறை காவலர்கள் கஜேந்திரனை மீட்டு சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுள் தண்டனை கைதி கஜேந்திரன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக கைதிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ