
அனைத்து மாவட்டங்களிலும் வரும் அக்டோபர் 09- ஆம் தேதி மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள்!
இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து மாவட்டங்களிலும் 9-ஆம் தேதி மாவட்ட செயற்குழு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை தொடர் பணித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். அவற்றின் தொடர்ச்சியாக அக்டோபர் 9-ஆம் நாள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அதில் 1-ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் சரி செய்யப்பட வேண்டும். அனைத்து நிகழ்வுகள் குறித்த அறிக்கையும் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.