
ரவுடி கருக்கா வினோத் என்பவர் இன்று (அக்.25) பிற்பகல் 03.00 மணி வாக்கில் நான்கு பாட்டில் பெட்ரோலுடன் ஆளுநர் மாளிகை நோக்கி வந்துள்ளார். ஒரு பாட்டிலில் தீயை பற்ற வைத்து ஆளுநர் மாளிகை வாசல் முன் வீசியுள்ளார். அப்போது, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்து காவல்துறையினர், ரவுடி கருக்கா வினோத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

வைபவ் – அதுல்யா ரவி இணையும் புதிய திரைப்படம்
அதைத் தொடர்த்து, கிண்டி காவல் நிலையத்திற்கு ரவுடி கருக்கா வினோத்தை அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தியதுடன், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். விசாரணையில், “நீட் தேர்வு தேவையில்லை; ஆளுநரைச் சந்திக்க வந்தேன். நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காக, தாக்குதல் நடத்தினேன்” என்று ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரவுடி கருக்கா வினோத் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறும் காவல்துறை, கடந்த 2022- ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கருக்கா வினோத் தாக்கியுள்ளார். இவர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் வழக்கம் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ கொண்டாட்டத்தில் விபரீதம்… லோகேஷ் கனகராஜ் படுகாயம்..
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல், தகவலறிந்து வந்த தடயவியல் துறை நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கண்ணாடி துண்டுகளைச் சேகரித்தனர்.