
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!
கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூன் 28- ஆம் தேதி அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்தார். அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, மோசமாக கையாளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எதிராக, அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை என்றது.
காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்
மேலும், விசாரணைக்கு தடைக்கோரிய மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுப்பதாகக் கூறி, தள்ளுபடியும் செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சரி தான் என்றும், அவர் போன்றவர்கள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றிக் கூற வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.