
இலங்கை மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு பதிலாக, தாம் பங்கேற்க இருந்ததாகவும், ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நேரத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடையில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “இலங்கை மலையக தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு பதிலாக என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். வெளியுறவுத்துறை அனுமதிக்காகக் காத்திருந்தேன்; நவம்பர் 01- ஆம் தேதி வரை அனுமதி கிடைக்கவில்லை. நவம்பர் 02- ஆம் தேதி பிற்பகல் நிகழ்ச்சி நடந்தது; ஆனால் நவம்பர் 01- ஆம் தேதி அன்று இரவு 09.00 மணிக்கு தான் அனுமதி கிடைத்தது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் முன்பே எனது பயணத்தை ரத்துச் செய்து விட்டேன். இலங்கையில் இருந்து முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு வீடியோ உரை தருமாறு கேட்டனர். பல்வேறு அலுவல்கள் இருந்த நேரத்திலும் முதலமைச்சர் வீடியோ உரையை அனுப்பி வைத்தனர்.
காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்
இலங்கையில் முதலமைச்சரின் உரை ஒளிப்பரப்பப்படாததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.