- Advertisement -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட்கா, கூல் லிப், போன்ற போதைப் பொருட்கள் தொடர்பாக அதிரடி சோதனையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்துகின்றனர்.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுக்கொள்ளாத கடைகளை காவல்துறை மூடியதாக கூறப்படுகிறது. மேலும் பிடிப்பட்ட கடைகாரர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.